Showing posts with label பிரபலங்களின் வாழ்வில். Show all posts
Showing posts with label பிரபலங்களின் வாழ்வில். Show all posts

Tuesday, 14 May 2013

ஆபிரஹாம் லிங்கன்


ஆபிரஹாம் லிங்கனின் தந்தை ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. ஆனால் தனது  உழைப்பாலும் முயற்சியாலும் அமெரிக்க ஜனாதிபதியானார் லிங்கன். அவரை அவமானப்படுத்தும் எண்ணத்துடன் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் ஒருவர் பேசினாராம். ”மிஸ்டர் லிங்கன், உங்களைப் பல பேர் இங்கே பாராட்டிப் பேசினார்கள். அது குறித்து நீங்கள் மகிழ்ந்து விட வேண்டாம். உங்கள் பழைமை, வறுமை குறித்து நான் நினைவூட்ட வேண்டும். உங்கள் அப்பா தைத்துக் கொடுத்த ஷூ இன்னும் என் காலில் இருக்கிறது. ஞாபகம் இருக்கட்டும்” என்று லிங்கனின் தந்தை செருப்புத் தைப்பவர் என்று குத்திக் காட்டினாராம்.

ஆபிரஹாம் லிங்கனோ பதற்றப்படாமல் “நண்பரே, என் தந்தை மறைந்து பல காலம் ஆயிற்று, ஆனால் அவர் தைத்துக் கொடுத்த காலணி இன்னும் உங்களிடம் உழைக்கிறது என்றால் என்ன பொருள்? அவர் எவ்வளவு சிறந்த தொழிலாளி என்பது தெரிகிறது அல்லவா? அப்படி ஒரு சிறந்த தொழிலாளியின் மகனாகப் பிறந்தது குறித்து நான் பெருமை அடைகிறேன்.அது மட்டுமல்ல. இப்போழுதும் உங்கள் செருப்பு கிழிந்து போனால் என்னிடம் கொடுங்கள். நான் அதைச் சரி செய்து தைத்துத் தருவேன். எனக்கு செருப்பு தைக்கவும் தெரியும், நாடாளவும் தெரியும். ஒரு முக்கியமான விசயம், இரண்டுமே நன்றாகத் தெரியும்” என்று ஒரு போடு போட்டாராம்.

Saturday, 3 November 2012

பிரபலங்களின் வாழ்வில்


பிரபலங்களின் வாழ்வில் மகிழ்ச்சி, நகைச்சுவை, சோகம், ஆச்சரியம், கோபம் போன்ற உணர்ச்சி பூர்வமான நிகழ்ச்சிகள் நடந்திருக்கும்.  இது போன்று நாம் படித்த, கேள்விப்பட்ட, பார்த்த நிகழ்ச்சிகளை இந்தத் தலைப்பில் பகிர்ந்து கொள்கிறேன்.
இது போன்ற நிகழ்ச்சிகள் நமக்கு படிப்பினையாக அமையலாம். ஏன், சில நிகழ்ச்சிகளிலிருந்து நம் பிரச்சினைகளுக்கு விடைகூட கிடைக்கலாம். நமக்கு தன்னம்பிக்கை கிடைக்கலாம்.  



முதல் பதிவாக ஒரு நகைச்சுவைப் பதிவுடன் ஆரம்பிக்கிறேன்.
கி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது. அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை. கி.வா.ஜ உடனேஇம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும் சரியில்லை" என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அனைவரும் ரசித்தனர்.

கி.வா.ஜகன்னாதன் ஒரு விருந்தில் கலந்துகொண்டபோது உங்களுக்குப் பூரி பிடிக்குமா?" என்று கேட்டார்கள்.
ஜகன்னாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்று உடன் பதிலளித்தார். கி.வா.ஜ