Monday, 19 August 2013


  நேற்று (19.08.2013) 

MAAC ANNANAGAR (ANNANAGAR (CHENNAI) CENTRE OF MAYA ACADEMY OF ADVANCED CINEMATICS) 

நடத்திய புகைப்படப் போட்டியில்

 என் மகள் சந்தியா ரமணி 

பரிசு பெற்ற காட்சி.


  







என் மகள் எடுத்த பரிசுக்குரிய புகைப்படம்



Saturday, 17 August 2013

அரசு கஜானா





அரசு கஜானா
நிரம்பி வழிந்தது
கண்ணம்மா,
பொன்னம்மா,
சின்னம்மாக்களின்
தாலிகள்
அடகுக் கடைக்குப்  
பாடம் படிக்கப்

போனதால்


Thursday, 15 August 2013

சுதந்திர தின வாழ்த்துக்கள்.






இந்தியனாகப் பிறந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.


அடுத்து ஒரு பிறவி இருந்தால் அதுவும் இந்தியனாகவே பிறக்க ஆசைப் படுகிறேன். 

Wednesday, 7 August 2013

ரமலான் வாழ்த்துக்கள்.


ரமலான் நல் வாழ்த்துக்கள்.



நேற்று மாலை எழும்பூர் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தேன்.   எப்பொழுதும் ரயில் நிலையத்தில் சந்திக்கும் ஒரு தோழி என் அருகில் வந்து அமர்ந்தார்.   வலது கையில் மருதாணி இட்டுக்கொண்டிருந்தார்.  ‘என்னப்பா, உங்க ஆபீஸ்ல மருதாணியெல்லாம் இட்டு விடறாங்களான்னு கேட்டேன்.  ‘இல்லை என்னோட 16 ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வு பெற்ற ஒரு இஸ்லாமிய நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.  அவர் மனைவி மருதாணி இட்டு விட்டார்.  ரொம்ப வருடங்களாக ரம்ஜானுக்கு 2 நாட்கள் முன்பு அவர்கள் வீட்டுக்குச் செல்வேன்.  தீபாவளிக்கு அவர்கள் என் வீட்டிற்கு வருவார்கள்.என்று சொன்னார்.   கேட்பதற்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
பெண் கொடுத்து பெண் எடுக்க வேண்டாம்.  எம்மதமும் பார்க்காமல் நல்ல நண்பர்களாக இருக்கலாமே. 
அனைத்து இஸ்லாம் தோழர், தோழியர் அனைவருக்கும் மனமார்ந்த ரமலான் வாழ்த்துக்கள்.