இல்லம் இனிய இல்லம்.
பகுதி 2.
கல்யாணம் பண்ணிப்பார்
வீட்டைக் கட்டிப்பார்
பழமொழி எல்லாம் சும்மா இல்லீங்க. பெரியவங்க எல்லாம் வாழ்ந்து, அனுபவித்து சொன்ன
அனுபவ மொழிகள் பழமொழிகள்.
என்னுடைய சின்ன வயசு காலங்கள்ள எனக்குத்
தெரிஞ்ச வரைக்கும் சொந்த வீடெல்லாம் குதிரைக்கொம்புதான். நானும் திருமணம் ஆகிறவரை இருந்தது வாடகை
வீடுகளில்தான்.
எங்க வீட்டுக்காரர் கொஞ்சம், இல்லை, இல்லை
ரொம்ப துறு, துறு. நினைச்சா அதை உடனே
நிறைவேத்திடணும். எங்க திருமணம் முடிந்ததும்
நாங்க குடியிருக்க ஏற்பாடு செய்த வீட்டை (வாடகை வீடு தான் சொந்த வீடு கூட இல்லை), திருமணத்திற்கு முன்பே அவரே
தனியாக வெள்ளையடிச்சு இருந்தார்ன்னா பார்த்துக்கங்களேன்.
ஒரு
நாள் என்னுடைய அலுவலகத்திலிருந்து 4, 5 நண்பர்கள் வீடு கட்ட நிலம் வாங்கப்
போகிறோம், வண்டலூரில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரம், தாம்பரத்திலிருந்து ஆறு
கிலோ மீட்டர் தூரம், மண்ணிவாக்கம் என்னும் இடத்தில். நீங்களும் வாங்கன்னு சொல்லி என் வீட்டுக்காரரையும்
அழைத்துக் கொண்டு போனார்கள் (NOTE THE
POINT - நான் போகவில்லை). போனவங்க முதல்ல ஒரு ஐயர் கையால பணம் கொடுக்கணும்ன்னு சொல்லி
ஆயிரம் ரூபாய் முன்பணம் என் வீட்டுக்காரரை கொடுக்கவைத்து விட்டனர். உருட்டி பிரட்டி, தேத்தி 26,000 ரூபாய்க்கு 2
கிரவுண்டுக்குக் கொஞ்சம் கம்மி, இடத்தை வாங்கிட்டோம்.
என்னை ஒரு நாள் அந்த இடத்தைப் பார்க்க என் கணவர் என்னை
அழைத்துச் சென்றார்.
அந்த
இடத்தைப் பார்த்ததும் வயிற்றிலிருந்து ஒரு பந்து உருண்டு, தலைசுத்தி எனக்கு மயக்கமே வரும்
போல ஆயிற்று. ஆஹா இந்த இடத்தில் வீடு
கட்டி, குடி வந்து, எப்படி வேலைக்குப் போய், பையனை படிக்க வைத்து, மலைப்பா
இருந்தது எனக்கு.
இந்த
மாதிரிதான் இருந்தது அந்த இடம்.
இந்த இடம் வேண்டாம் என்று என் வீட்டுக்காரரிடம் சொன்னேன். ’அப்படீன்னா
ஆயிரம் ரூபாய் திரும்ப கிடைக்காது, பரவாயில்லையா?’ என்றார். 1985 ல
ஆயிரம் ரூபாய்ன்னா விட மனசு வருமா? சரி ஏதோ இடம் வாங்கியாச்சு. அவர்
வழிக்கே போவோம்ன்னு பேசாம இருந்துட்டேன்.
அடுத்து
வீடும் கட்ட ஆரம்பிச்சோம். அஸ்திவாரம்
தோண்டியதும், அந்த மேஸ்திரிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் வேலை நின்று
விட்டது. மூன்று மாதம் கழித்து மீண்டும்
வேலையைத் தொடங்கினார் அந்த மேஸ்திரி.
ஆனால் அதற்குள் மழை பெய்து அஸ்திவாரம் நல்ல உறுதியா ஆயிடுத்து. அஸ்திவாரம் போட்டு முடித்ததும் மறுபடியும் அந்த
மேஸ்திரியால் வேலையைத் தொடர முடியாத நிலை.
பிறகு வேறொரு மேஸ்திரியைப் பிடித்து மீண்டும் தொடர்ந்தோம்.
தொடரும் இது தொடர்கதை போல தொடரும்